Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு! – காவல்துறை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (10:20 IST)
அக்டோபர் 2ம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பல்வேறு மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாள் அன்று தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் பொது அமைதிக்கு இடையூறு விளையும் என இந்த பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு பல்வேறு மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், திருச்சி, திருப்பத்தூர், சேலம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக காவல்துறை, அக்டோபர் 2 அன்று எந்த அமைப்பும் பேரணி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட காவல் தலைமையே முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 2ம் தேதி பொதுக்கூட்டம், போராட்டம் உள்ளிட்டவற்றிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வருகிறது TATA NANO! வேற Level டிசைன்.. அதே குறைந்த விலை!! - அசர வைக்கும் தகவல்!

அந்தமான் தீவுகளில் ஆரம்பித்தது தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் எப்போது?

போர் நிறுத்தத்திற்கு பின் எல்லையில் துப்பாக்கி சண்டை.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு! சாகும் வரை ஆயுள் தண்டனை! - பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு!

10 வயது மகனை கொன்று சூட்கேஸில் அடைத்த தாய்! காதலனும் உடந்தை!

அடுத்த கட்டுரையில்
Show comments