Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக போலீசாரின் லட்சணம் இதுதான்: வறுத்தெடுத்த விஜயகாந்த்

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2015 (01:17 IST)
உயர் நீதிமன்றங்களுக்கும், நீதிபதிகளுக்கும் தமிழக போலீஸ் படை விட, மத்திய போலீஸ்படை பாதுகாப்புத்தான் தேவை என தலைமை நீதிபதியே கூறியுள்ளதில் இருந்தே, தமிழக போலீசாரின் லட்சணத்தை தெரிந்து கொள்ளலாம் என விஜயகாந்த் மிகவும் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, சென்னை விமான நிலையத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக மக்களுக்கோ, எதிர்க்காட்சி, தலைவரான எனக்கோ பாதுகாப்பு அளிக்க தமிழக போலீசாருக்கு நேரம் இல்லை. ஆனால், முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளித்தால் மட்டும் போதும் என அவர்கள்  செயல்படுகின்றனர்.
 
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு கூட பாதுகாப்பு கோரி நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது. எங்கள் கட்சி கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
உயர் நீதிமன்றங்களுக்கும், நீதிபதிகளுக்கும் தமிழக போலீஸ் படை விட, மத்திய போலீஸ்படை பாதுகாப்புத் தான் தேவை என தலைமை நீதிபதியே கருத்து கூறியுள்ளார். இதில் இருந்தே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்றும், தமிழக போலீசாரின் லட்சணத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்று மிகவும் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
 

புதிய அணை - கேரள அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியக் கூடாது..! சீமான் வேண்டுகோள்..!!

எப்படி இருக்கிறார் வைகோ.? வதந்திகளை நம்பாதீர்கள் - மகன் வேண்டுகோள்..!

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

Show comments