Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலவரத்திலும் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்: தமிழகத்தில் கன்னடர்களுக்கு பூரண கும்ப மரியாதை!

கலவரத்திலும் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்: தமிழகத்தில் கன்னடர்களுக்கு பூரண கும்ப மரியாதை!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (17:50 IST)
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகத்தில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. தமிழகத்திலும் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் நடந்தன.


 
 
இதனையடுத்து இரு மாநில மக்களும் ஒருவருக்கொருவர் எதிரையை போல நடந்துகொள்ளும் சூழல் நிலவி வருகிறது. தமிழர்களின் வாகனங்களை தாக்குவதும், எரிப்பதும், தமிழக மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என கர்நாடக மக்கள் அத்துமீறி நடந்துகொள்கின்றனர்.
 
ஆனால் தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கு வந்த கர்நாடக பக்தர்களை தமிழக மக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
 
காவிரி பிரச்சனை தொடர்பாக இரு மாநிலங்களிலும் நிலவும் கலவர போக்கு மாறி அமைதியும், ஒற்றுமையும்  ஏற்படுத்த வழிபாடு செய்ய ராமேஸ்வரம் வந்த கர்நாடக பக்தர்களை பூரணகும்ப மரியாதை கொடுத்து ராமேஸ்வரம் இந்து மக்கள் கட்சியினர் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சுவாமி தரிசனம் செய்த கர்நாடக பக்தர்களை அவர்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments