Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவணங்களை ஒப்படைக்காத பொன்.மாணிக்கவேல்! – வழக்கு தொடர்ந்த தமிழக அரசு!

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (13:06 IST)
சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்காத பொன்.மாணிக்கவேல் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை சுப்ரீம் கோர்ட்டு பதவி நீட்டிப்பு செய்தது. அவரது பதவிக்காலம் கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை அவர் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிலை கடத்தல் பிரிவு உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் ஆவணங்களை தற்போது வரை அரசிடம் ஒப்படைக்காமல் பொன்.மாணிக்கவேல் காலவிரயம் செய்வதாக கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அதிகார வரம்புக்கு மீறி ஆவணங்களை வைத்திருப்பதால் தமிழக அரசு பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கௌ தொடர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments