Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர் சேர்க்கை! – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (13:44 IST)
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகளவு விண்ணப்பித்துள்ளதால் மாணவர் சேர்க்கையும் அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் பலரும் இளங்கலை படிப்புகளுக்காக தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்திருந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் கவுன்சிலிங்கில் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்த நிலையில், ஏராளமான மாணவர்கள் காத்திருப்பில் இருந்தனர். முன்னதாக மாணவர் சேர்க்கையை பொறுத்து அரசு கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பல மாணவர்கள் காத்திருப்பில் உள்ளதால் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கும், சுயநிதி கல்லூரிகளில் 10% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments