Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தண்ணீர் திறப்பு – மகிழ்ச்சியில் மக்கள்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (13:13 IST)
ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஆடி மாதம் 18ம் நாள் தமிழகமெங்கும் ஆடிப்பெருக்கு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய நாளில் மக்கள் புனித தலங்களுக்கு சென்று வழிபட்டு, நீர்நிலைகளில் நீராடுவர். தமிழகமெங்கும் ஆறுகள் வறண்டு கிடப்பதால் ஆடிப்பெருக்கு விழாவை எப்படி கொண்டாடுவது என மக்கள் சோகத்தில் இருந்தனர்.

தற்போது மேட்டூர் அணையில் கணிசமான அளவு நீர் இருப்பதால் ஆடிப்பெருக்கில் மக்கள் நீராட வசதியாக தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பினால் மக்கள் மகிழ்ச்சியோடு ஆடிப்பெருக்கை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் 5 கடற்கரையின் தூய்மை பணிகள்: தனியாருக்கு விட முடிவு..!

அடுத்த போப்பை தேர்வு செய்ய பணியை தொடங்குங்கள்: போப் பிரான்சிஸ்

எனக்கு நிறைய கொலை மிரட்டல் வருகிறது.. வருத்தத்துடன் கூறும் எலான் மஸ்க்..!

இயக்குனர் அமீர் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியது ஜாபர் சாதிக் தான்,, அமலாக்கத்துறை

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தவர் கைது.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments