Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது - முதல்வர் பழனிசாமி பேச்சு!

Webdunia
புதன், 13 மே 2020 (10:26 IST)
கொரோனா ஊரடங்கு முடிய உள்ள நிலையில் தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் நேற்று நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்போது பேசிய அவர் “கொரோனாவை தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது. தனிமனித இடைவெளி,மாஸ்க் அணிதல் போன்றவிதிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும்; பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments