Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேன் தண்ணீர் விற்பனையாளர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்! மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (13:51 IST)
தமிழகத்தில் அனுமதி பெறாத குடிநீர் ஆலைகளை முடியதை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தமிழகம் முழுவதும் முறையான அனுமதி பெறாமல் இயங்கும் குடிநீர் ஆலைகளை சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேன் தண்ணீர் விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இதனால் குடிப்பதற்கு கேன் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பல இடங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் தீர்ப்பளித்த நீதிமன்றம் அனுமதி பெறாமல் இயங்கிய ஆலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அரசின் அனுமதி கிடைத்தப்பின் சீல் வைக்கப்பட்ட ஆலைகள் மீண்டும் இயங்க தொடங்கலாம் என்றும், அனுமதி அளிப்பதற்கான பணிகளை 15 நாட்களுக்கு செய்யுமாறும் கூறியுள்ளதால் கேன் குடிநீர் முகவர்கள், விற்பன்னர்கள் தங்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர். இதனால் வழக்கம் போல அனைத்து பகுதிகளில் கேன் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments