தமிழிசையை கலாய்த்தால் பொறுக்க மாட்டேன் - பூசாரி உண்ணாவிரதம்

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (14:07 IST)
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை சமூகவலைத்தளங்கலில் பலரும் கிண்டலடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தை சேர்ந்த பூசாரி ஒருவர் உண்ணாவிரதம் இருந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும் என உரக்கக் கூறி வலம் வருபவர். தமிழகத்தில் எப்படியும் ஒரு நாள் பாஜக ஆட்சி அமையும் என அவர் தொடர்ந்து நம்பிக்கையுடன் கூறி வருகிறார். ஆனால், சமூக வலைத்தளங்களில் பாஜகவிற்கு எதிராகவும், தமிழிசையை கிண்டலடித்தும் பல மீம்ஸ்கள் வலம் வருகின்றன.
 
பல பேட்டிகளில் இதுகுறித்து தமிழிசை காட்டமாகவும், சில சமயம் நகைச்சுவையாகவும்  கருத்து தெரிவித்து வருகிறார்.
 
இந்நிலையில், சேலம் சாமிநாதபுரத்தில் வசித்து வரும் சதீஷ்குமார், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவகம் எதிரே கையில் ஒரு பாதகையுடன் வந்தார். அதன் தீடீரென கீழே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

 
அவர் கையில் வைத்திருந்த பாதகையில் “தமிழிசை அம்மா அவர்களை சமூக வலைத்தளங்களில் இழிவு படுத்துவோர்களை கைது செய்ய வேண்டி உண்ணாவிரதம்” என எழுதப்பட்டிருந்தது.
 
இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி, இப்படி அனுமதி பெறாமல் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
 
இவர் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் பூசாரியாக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments