Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி எங்களுக்கு ஹீரோ இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (16:36 IST)
விரைவில் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளது பற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 21ம் தேதி, கங்கை அமரன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது அவருக்கு ரஜினிகாந்த வாழ்த்து கூறியதாக தெரிகிறது.
 
இதனையடுத்து, ரஜினி பாஜகவின் ஆதரவாளர் எனவும், கங்கை அமரனுகு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார் எனவும் செய்திகள் பரவியது. இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தான் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 
 
இந்நிலையில், இன்று வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக கங்கை இன்று சென்றார். அவருடன் தமிழைசை சவுந்தரராஜனும் சென்றார். அதன்பின் ரஜினியின் அறிவிப்பு பற்றி தமிழிசையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 
 
அதற்கு பதிலளித்த அவர் “ரஜினிகாந்த் கங்கை அமரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுவே போதும். மேலும், எங்களின் ஹீரோக்கள் மோடியும், அமித்ஷாவும் மட்டும்தான்” என பதிலளித்தார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments