Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Siva
புதன், 26 பிப்ரவரி 2025 (08:44 IST)
தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவும் காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், அதேபோல் காரைக்கால் பகுதியில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிகிறது.
 
Edited by Siva 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுடன் நிறைவு பெறுகிறது மகா கும்பமேளா.. தூய்மைப்படுத்தும் பணிகள் தொடக்கம்..!

பனையூரில் உள்ள விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்.. பெரும் பரபரப்பு...!

தவெக ஆண்டுவிழாவில் காமராஜர், வேலு நாச்சியார் உறவினர்கள்.. விஜய்யின் பக்கா பிளான்..!

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments