Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 22 ஆம் தேதி வரை இடியுடன் மழை!

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (14:34 IST)
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.


தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் மழை குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வரும் நிலையில் இன்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை இடியுடன் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மேலும் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் மலை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments