Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு!!

Webdunia
புதன், 4 மே 2022 (14:36 IST)
இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் கடலோரப்பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து குளிர்காலமும் முடிந்து வெயில்காலம் தொடங்கி விட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் அரிதாக கடந்த மார்ச் மாதம் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி தமிழகம் நோக்கி வந்தது. இதனால் சில பகுதிகளில் மழைப்பொழிவு இருந்தது.
 
தற்போது மீண்டும் வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் கடலோரப்பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதன்படி தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை , திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி , தருமபுரி, சேலத்தில் கனமழை பெய்யலாம் எனவும் நாளை மறுநாள் நீலகிரி , கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரியிலும் கனமழை பேய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதே போல சென்னையில் 2 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநீக்கம் செய்யப்பட்ட மேற்குவங்க ஆசிரியர்கள் பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட்

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!

விஜய்க்கு எதிராக சமயக்கட்டளை அறிவித்த இஸ்லாமிய அமைப்பு: என்ன காரணம்?

கருணாநிதி கல்லறையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமா? நயினார் நாகேந்திரன் கண்டிப்பு..!

ஓஹோ.. அதான் விஷயமா? வருங்கால முதல்வர் நயினார் நாகேந்திரன்!? - பாஜகவினர் போஸ்டரால் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments