Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும் - முன்னாள் முதல்வர் பசுவராஜ் பொம்மை

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (18:32 IST)
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர்  திறப்பதை நிறுத்த வேண்டும் என்று கர்நாடகம் மாநில முன்னாள்  முதல்வர் பசுவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் கர்நாடகம் மாநிலம் காவிரியில்  தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி இருந்தார்.

அதன்படி,  கர்நாடகம் மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 10,304 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து கர்நாடகம் பகுதிகளுக்கு பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டு உள்ளதாகவும் தகவல்  வெளியானது.

இந்த நிலையில்,  காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதைத் திறப்பதை நிறுத்த வேண்டும் என்று கர்நாடகம் மாநில முன்னாள் முதல்வர் பசுவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கர்நாடகம் அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. இதனால், தமிழகத்திற்கு நீர் திறந்துவிடும் பட்சத்தில் கர்நாடகம் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்பதில், அரசு உறுதியாக இருக்க வேண்டுமென்று முதல்வர் சித்தராமையாவுக்கு பாஜக முன்னாள் முதல்வர் பசுவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார்.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments