Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம்: முதல்வருக்கு மருத்துவர் சங்கம் கடிதம்

Webdunia
திங்கள், 2 மே 2022 (18:48 IST)
மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு என்பவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம் முதல்வருக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளது.அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
சமஸ்கிருத உறுதிமொழி என்பது தேவையற்றது என்பதை ஏற்கனவே தமிழக மருத்துவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஆனால் தற்போது அந்த கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு என்பது எந்தவித உள்நோக்கத்துடன் நடத்தப்படவில்லை. தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த இந்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 
எனவே எந்தவித உள்நோக்கம் இல்லாத காரணத்தினால் இந்த நிகழ்வுக்கு முதல்வரை பொருப்பாக்கி அவரை இந்த பதவியிலிருந்து இறக்கி வைத்திருக்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளது .

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments