Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவை வரவேற்க, சிறை வளாகத்தில் காத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம்

Webdunia
சனி, 18 அக்டோபர் 2014 (13:10 IST)
சிறையில் இருந்து வெளிவரும் ஜெயலலிதாவை வரவேற்க, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் காத்திருக்கின்றனர்.
 
ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து தீர்ப்பு நகல் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹாவிடம் இன்று சமர்பிக்கப்பட்டது.
 
அப்போது, ஜெயலலிதாவுக்கு ஜாமீனுக்கான உத்தரவாதம் ரூ.2 கோடிக்கான பிணை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார்.
 
இதையடுத்து, நீதிபதியின் உத்தரவு நகலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகளிடம் கொடுக்க வழக்கறிஞர்கள் விரைந்தனர்.
 
இந்நிலையில், ஜெயலலிதாவை வரவேற்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் காத்திருக்கின்றனர்.
 
பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் அ.தி.மு.க.வினரை உள்ளே விட காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
இதனிடையே, ஜெயலலிதா பிற்பகலில் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது. விமானம் மூலம் சென்னை வரும் ஜெயலலிதாவை வரவேற்க அ.தி.மு.க.வினர் மீனம்பாக்கத்தில் இருந்து போயஸ் கார்டன் வரை சாலையின் இரு பக்கமும் காத்திருக்கின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments