Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று: ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் ஜெயலலிதா

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2015 (11:01 IST)
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று  மதியம் தனது வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
 

 
சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
 
இந்நிலையில், தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மதியம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
 
அவருடன் தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், பழனியப்பன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
முதலமைச்சர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்வதால், அதிமுகவினர் அந்த பகுதி முழுக்க குவிந்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் காவல்துறை கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments