Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரம் - விழுப்புரம் சிறப்பு புறநகர் ரயில்.. நாளை முதல் புதிய மாற்றம்..!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (17:58 IST)
தாம்பரம் = விழுப்புரம் சிறப்பு புறநகர் ரயில் நாளை முதல் கூடுதல் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 
 
தாம்பரம் - விழுப்புரம் - தாம்பரம் சிறப்பு புறநகர் ரயில் இதுவரை கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று சென்றது. 
 
இந்த ரயில் கூடுதலான ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். பயணிகளின் கோரிக்கையை பரிசீலனை செய்த தென்னக ரயில்வே தற்போது  மேலும் ஏழு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவித்துள்ளது. 
 
இதன்படி தாம்பரம் - விழுப்புரம் - தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு புறநகர் ரயில்கள் நாளை முதல் பரனூர், மறைமலை நகர், காட்டாங்குளத்தூர், பொத்தேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments