Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை செய்த பின்னர் சுவாதியின் வீட்டருகே பதுங்கிய கொலையாளி!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (09:54 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி சுவாதி என்ற இளம்பெண்ணை படுகொலை செய்த கொலையாளி கொலை செய்த பின்னர் சுவாதியின் வீட்டருக்கே பதுங்கி இருந்தான் என்பது தெரியவந்துள்ளது.


 

 
 
24-ஆம் தேதி காலை 6:30 மணிக்கு சுவாதி மர்ம நபர் ஒருவனால் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
கொலை செய்தவன் சுவாதியின் செல்போனை எடுத்து சென்றுள்ளான் என்பது தெரியவந்தது. 24-ஆம் தேதி காலை 6.40 மணிக்கு சுவாதி கொலை செய்யப்பட்டார். அவரது செல்போனை எடுத்துச் சென்ற கொலைகாரன் காலை 8.15 மணி வரை அதை ஆன் செய்தே வைத்திருந்திருக்கிறான்.
 
பின்னர் அந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருக்கிறான். சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போது அவரது செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. சுவாதியின் வீடும் சூளைமேட்டில் தான் உள்ளது. சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போது காட்டிய இடம் சுவாதியின் வீட்டின் அருகில் உள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனையடுத்து சுவாதியை கொலை செய்த அந்த கொலைகாரன் சூளைமேட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை காட்டி சூள்ளைமேட்டில் உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளில் சோதனை நடத்துகின்றனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments