Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.வி.சேகரை கைது செய்ய முடிவா? முன்ஜாமீன் எடுக்க முயற்சிப்பதாக தகவல்

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (16:00 IST)
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்திருந்த எஸ்.வி.சேகருக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். நேற்று எஸ்.வி.சேகர் வீடு முன்பும், பாஜக அலுவலகமான கமலாலயம்
முன்பும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்
 
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுத்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்ததை அடுத்து அவர் மீது புகாரும் பதிவு  செய்யப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து எஸ்.வி.சேகரை எந்த நேரமும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளிவந்தவுடன் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் பெற முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது கட்சிரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments