Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.வி.சேகரை கைது செய்ய முடிவா? முன்ஜாமீன் எடுக்க முயற்சிப்பதாக தகவல்

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (16:00 IST)
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்திருந்த எஸ்.வி.சேகருக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். நேற்று எஸ்.வி.சேகர் வீடு முன்பும், பாஜக அலுவலகமான கமலாலயம்
முன்பும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்
 
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுத்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்ததை அடுத்து அவர் மீது புகாரும் பதிவு  செய்யப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து எஸ்.வி.சேகரை எந்த நேரமும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளிவந்தவுடன் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் பெற முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது கட்சிரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments