Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் 29 நாடுகளில் வகுப்பறைகள் எப்படியுள்ளன? சூர்யாவின் அகரம் வெளியிட்ட நூல்..!

Mahendran
வியாழன், 1 பிப்ரவரி 2024 (14:37 IST)
இந்தியாவில் உள்பட உலகில் உள்ள 29 நாடுகளில் வகுப்பறைகள் எப்படி உள்ளன? வகுப்பறைகளில் என்னென்ன வசதிகள் உள்ளன? வகுப்பறையில் உள்ள மாணவர்களின் மனோபாவம் எப்படி உள்ளது? என்பதை ஆய்வு செய்து உருவாக்கிய நூலை சூர்யாவின் அகரம் வெளியிட்டுள்ளது. 
 
இந்த நூல் குறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
 
'வகுப்பறை உலகம்' 
 
யாதும் இதழில் 'வகுப்பறை உலகம்' தொடராக வெளிவந்து தற்போது நூல் வடிவம் பெறுகிறது. அகரத்தின் வெளியீடாக வரும் இந்த நூல் கல்வியின் அடிப்படையையும் பிற நாடுகளின் கல்வியமைப்பையும் புரிந்து கொள்ள உதவும். 
 
உலகின் 29 நாடுகளில் வகுப்பறைகள் எப்படியுள்ளன என்பதைப் படம் பிடித்துக் காட்டும் ஓர் ஆவணம். இந்த நூலை எழுதியுள்ள விஜயபாஸ்கர் விஜய் அவர்களுக்கும், இதை நூலாகத் தொகுத்து வெளியிடும் தரு மீடியா குழுவினருக்கும், கல்வியின் வாயிலாகச் சமூக மாற்றத்தில் பங்கெடுத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும். 
 
கல்வியே நமது சமூகப் பாதுகாப்பு. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments