Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமனார் மாமியாரை குடிசையில் வைத்து எரித்த மருமகன்

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (10:51 IST)
தூத்துக்குடியில் மருமகனே தனது மாமனார் மற்றும் மாமியாரை உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் தனது மாமனார் வீட்டிலேயே மனைவியுடன் தங்கியிருந்தார். இவர் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி உடல் நலக்குறைவு காரணமாக அவரது அக்காள் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
 
குடிபோதையில் நேற்று வீடு திரும்பிய பிரசாத் தனது மாமனார், மாமியாரிடம் தகராறு செய்துள்ளார். அவர்கள் பிரசாத்தை கண்டித்துள்ளனர்.
 
பின்னர் அவர்கள் இருவரும் தூங்கிவிட்டனர். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டு வாசலில் படுத்திருந்த பிரசாத் குடிசை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
 
இதில் அவரது மாமனார், மாமியார் இருவதும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் பிரசாத் காவல்துறையினர் சரண் அடைந்தார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments