Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 20 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. பெரும் பரபரப்பு..!

Siva
செவ்வாய், 28 ஜனவரி 2025 (08:15 IST)
சென்னை, மயிலாடுதுறை உள்பட 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீரென இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐஎஸ்ஐ தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருவதாக தெரிகிறது.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் பகுதிகளில் சோதனை நடந்து வருவதாகவும் அதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் என்ற கிராமத்தில் மட்டும் 15 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஐந்து இடங்கள் மயிலாடுதுறையில் 15 இடங்களில் ஒரே நேரத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் தான் என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகத்தில் தீவிர சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடத்தி வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments