Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து பாதிப்பு..!

Mahendran
சனி, 1 ஜூன் 2024 (09:43 IST)
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் திடீரென மூன்று அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் அவ்வப்போது திடீர் திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டு வருகிறது என்றும் மெட்ரோ பணிகள் காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஆற்காடு சாலையில் திடீரென 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்திய காவல்துறையினர் மாற்று வழியில் போக்குவரத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சில நிமிடங்கள் கழித்து பள்ளம் ஏற்பட்ட பகுதியை மட்டும் மறித்து மீதமுள்ள பகுதியில் போக்குவரத்து தொடங்கியதாகவும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஆற்காடு சாலையில் திடீர் என பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பள்ளம் 3 அடி ஆழத்திற்கு இருப்பதாகவும் மெட்ரோ பணிகளால் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளத்தை நிரப்பும் பணிகள் தொடங்க இருப்பதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் வழக்கமான போக்குவரத்து தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments