Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கோட்டையன் வீட்டிற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு.. பரபரப்பு தகவல்..!

Siva
புதன், 12 பிப்ரவரி 2025 (07:08 IST)
அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் வீட்டிற்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில நாட்களாகவே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், எம்ஜிஆர்-ஜெயலலிதா படங்கள் சிறியதாகவும், எடப்பாடி பழனிசாமியின் படம் பெரியதாகவும் இருந்ததை செங்கோட்டையன் சுட்டிக்காட்டியதை அடுத்து, இரு தரப்புகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில், அதிமுகவை செங்கோட்டையன் கைப்பற்ற திட்டமிட்டு வருவதாகவும், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியவர்களுடன் இணைந்து அதிமுகவை அவர் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிமுக தலைவர்களும் அவருக்கு மறைமுக ஆதரவு தருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் வீட்டிற்கு முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாகவும், அவருடைய வீட்டில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments