Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிசிடிவியை பார்த்ததும் தெறித்து ஓடிய கொள்ளையன் – வைரல் வீடியோ!

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (15:08 IST)
சென்னையில் பூட்டியிருந்த வீட்டுக்குள் கொள்ளையடிக்க சென்ற மர்ம நபர் அங்கு சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்ததும் பதறி ஓடிய காட்சி வைரலாகியுள்ளது.

சென்னை சிட்லபாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஸ்ரீதர். சமீபத்தில் வீட்டை பூட்டிவிட்டு ஸ்ரீதர் மற்றும் குடும்பத்தினர் எங்கேயோ வெளியே சென்றிருக்கின்றனர். வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து கொள்ளையடிக்க வந்திருக்கிறான் மர்ம ஆசாமி ஒருவன்.

முன்கதவு கேட்டை திறந்தவன் கதவை உடைக்க முயற்சிக்கும்போது கதவிற்கு மேல் சிசிடிவி கேமரா பொருத்தியிருப்பதை பார்த்திருக்கிறான் கொள்ளையன். உடனே மாட்டிக்கொண்டு விடுவோமோ என்ற பயத்தில் தலையில் அடித்து கொண்டு ஓடிவிட்டான்.
இந்த வீடியோவை வைத்து காவல் நிலையத்தில் ஸ்ரீதர் அளித்த புகாரை வைத்து மர்ம ஆசாமியை போலீஸ் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments