Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் புயலா ? மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - வானிலை மையம் அறிவிப்பு

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (16:02 IST)
இந்தியப் பெருங்கடல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில்  நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோடை வெயில்  கொளுத்தி வெக்கையை உண்டு பண்ணும் நேரத்தில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. குறிப்பாக நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, போன்ற இடங்களில் மழை அதிகமாக பெய்ததாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில் இந்திய வங்கக்கடலோரத்தில் புயல் போவதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு விடுத்துள்ளது. பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதயில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்று அறிவித்துள்ளது.
 
மேலும் இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுமண்டல்ம் அடுத்த 48 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் ஏப்ரல் 27 ஆம் முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
தமிழக கடற்கரையை நோக்கி இந்தப்புயலானது வரும் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்சி F55 5ஜி ஸ்மார்ட்போன்: என்ன விலை? என்ன சிறப்பு அம்சங்கள்?

பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

கேரளாவில் மேகவெடிப்பால் கனமழை: 6 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments