Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 21: குமரியில் நமக்கு நாமே பயணம் தொடக்கம்

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (23:59 IST)
திமுக சார்பில் நமக்கு நாமே என்ற பயணத்தை வரும் 21ஆம் தேதி அன்று கன்னியாகுமரியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.
 
அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் திரட்டும் வகையில், திமுக சார்பில் தமிழகம் முழுக்க பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
 

 
இதனையடுத்து, தமிழகம் முழுக்க நமக்கு நாமே என்ற பயணத்தை செப்டம்பர் 21ஆம் தேதி கன்னியாகுமரியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். இந்த பயணம் 3 கட்டங்களாக திட்டமிடப்பட்டு, 234 தொகுதிகளுக்கும் மு.க.ஸ்டாலின் செல்கிறார்.
 
அப்போது, மக்களின் நீண்ட நாள் பிரச்சினைகள், தீர்கப்படாத குறைகள் போன்றவற்றை முன்வைத்து சிறப்புறையாற்ற உள்ளார். நவம்பர் 8ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இந்த பயணம் நிறைவு பெறுகிறது. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments