Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்குவை தடுக்கும் ஸ்டாலின்.. பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம்

Arun Prasath
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (14:23 IST)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கி தானும் குடித்தார் திமுக தலைவர் முக ஸ்டாலின்

டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் டெங்குவை தடுக்க சுகாதாரத் துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மட்டுமின்றி உடன் வரும் உறவினர்களுக்கும் நிலவேம்பு கசாயம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதனை திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் பொது மக்களுக்கு வழங்கினார்.

பின்பு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கிய அவர், தானும் கசாயத்தை பருகினார். மேலும்” டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த தமிழக அரசு உரிய முயற்சி எடுக்க வேண்டும், திமுக சார்பாக நிலவேம்பு கசாயம் அளிக்க உத்தரவிட்டுள்ளேன்” எனவும் முக ஸ்டாலின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments