Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மையும் நீதியும் வெல்லும்: மனைவி பிரமிளாவின் குற்றச்சாட்டுக்கு ஸ்ரீதர் வேம்பு பதில்...!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (19:20 IST)
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிலா குற்றம் சாட்டிய நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஸ்ரீதர் வேம்பு பதில் அளித்துள்ளார். 
 
என்னையும் ஆட்டிசம் பாதித்த எனது மகனையும் கைவிட்டுவிட்டு எங்களுக்கு பொதுவாக இருந்த சொத்துக்களை வேறு சிலருக்கு மாற்றிவிட்டார் என ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிளா குற்றம் காட்டி இருந்தார்
 
இந்த  குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு என் மனைவி என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் என்றும் நான் என் மனைவி மகனை நிதி தொடர்பாக ஏமாற்றவில்லை என்றும் எப்போதும் அவர்களை ஆதரித்தே வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 
 
கடந்த மூன்று ஆண்டுகளாக என்னுடைய அமெரிக்க சம்பளம் என் வீடு எல்லாமே அவரிடம் தான் உள்ளது என்றும் அவர் நடத்தி வரும் அமைப்பு இப்போதும் ஜோஹோவின் ஆதரவில் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் 
 
நான் வாழும் நாட்கள் வரை அவை தொடரும் என்றும் இந்த குழப்பம் யாவும் குடும்ப பகை காரணமாக என் சித்தப்பாவால் ஏற்படுத்துகிறது என்றும் உண்மையையும் நீதியும் வெல்லும் என இப்போதும் நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments