Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்க இலங்கை அரசு முடிவு?

தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்க இலங்கை அரசு முடிவு?
, செவ்வாய், 5 ஜூலை 2016 (17:04 IST)
தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்க இலங்கை அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது.
 

 
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற் படையினரின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். பலர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
 
இந்நிலையில், தமிழக மீனவர்கள் சிலருக்கு தங்கள் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கான லைசென்ஸ் வழங்க இலங்கை அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கருணசேனா ஹெட்டியாராச்சி, குறைந்த எண்ணிக்கையிலான தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். ஆனால், இறுதி முடிவு எடுக்கவில்லை. இது தொடர்பாக நுட்பமான பரிந்துரைகள் உருவாக்கப்பட்டு இந்திய அரசுக்கு அளிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாய் இறந்தது தெரியாமல் பாசப் போராட்டம் நடத்திய குட்டி யானை : நெஞ்சை உலுக்கும் வீடியோ