Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை முடக்கும் இன்புளூவன்சா காய்ச்சல்..! – 1000 இடங்களில் சிறப்பு முகாம்!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (08:40 IST)
தமிழ்நாட்டில் இன்புளூவன்சா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் இன்று காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்புளூவன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

தமிழகத்தில் இன்று இன்புளூவன்சா காய்ச்சல் மருத்துவத்திற்காக 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 476 நடமாடும் மருத்துவக்குழுக்கள் பல பகுதிகளுக்கு மக்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் அளிக்க உள்ளனர்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தற்போது இன்புளூவென்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 371 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 5 வயதிற்கு உட்பட்ட 46 பேரும், 5 முதல் 14 வயதிற்கு உட்பட்ட 60 பேரும் உள்ளனர். ஆனால் இந்த காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பெரிய அளவில் பயப்பட தேவையில்லை. இந்த காய்ச்சல் பரவாமல் தடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments