Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாது விவகாரம்: நாளை மறுநாள் கூடுகிறது தமிழக சட்டமன்றம்

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (20:40 IST)
மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் ஆய்விற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதிக்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் மற்றும் சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments