மதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் மணிமாறன் இன்று திடீரென மதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். வைகோவின் தீவிர ஆதரவாளர். இவர் திடீரென மதிமுகவிலிருந்து விலகுவதாக, வைகோவிடம் கடிதம் கொடுத்துள்ளார் என்றும் விரைவில் அவர் திமுகவில் இணைய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதுபற்றி மணிமாறன் கூறுகையில் “மதிமுகவிலிருந்து விலகியது உண்மைதான். தமிழ்நாட்டில் நம்பர் ஒன் மாவட்டமாக தென் சென்னையை வைத்திருந்தேன். கட்சியை வளர்க்க அரும்பாடு பட்டேன். ஆனால், என் வேலைக்கு மதிமுகவில் எந்த மரியாதையும் இல்லை. எங்களை வைகோ தரக்குறைவான வார்த்தைகளில் பேசுகிறார்.
வேளச்சேரியில் என்னை போட்டியிடச் சென்னார் வைகோ. ஆனால் நான் மறுத்துவிட்டேன்.
மக்கள் நலக் கூட்டணி உருவாகியதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த கூட்டணி வெற்றி பெறாது. இது வைகோவிற்கு தெரியவில்லை. தவறான முடிவெடுத்து தொண்டர்களை பலியாக்கிவிட்டார். அவருக்கு 150 சவரனில் தங்க வாள் கொடுத்தேன்.
வைகோவை எனது சொந்த தந்தையாக நினைத்தேன். ஆனால் அவரிடம் எந்த கொள்கையும் இல்லை. தவறான முடிவுகளையே அவர் எப்போதும் எடுக்கிறார். கோவில்பட்டியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றிவிட்டார்.
அதைவிட விஜயகாந்த் என் தலைவர் என்று அவர் பேசியதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனவே மதிமுகவிலிருந்து விலகுவதாக முடிவெடுத்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.
விரைவில் அவர் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!