Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயின் நகையை களவாடி நாடகமாடிய மகன் கைது

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (19:34 IST)
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பைரோஜாபேகம்(60) என்பவர் நேற்று வெளியூர் சென்றிந்த போது,   அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த சுமார் 92 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் அள்ளி சென்றனர்.



இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்திரவின் பேரில் அரவக்குறிச்சி டி.எஸ்.பி. கீதாஞ்சலி தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், உடுமலைபேட்டையில் வசிக்கும் பைரோஜாவின் மூத்தமகன் சையதுசலீம்(37) என்பவரே  92 சவரன் தங்க நகைகளை திருடியதாக தெரியவந்தது.

சையதுசலீமை அரவக்குறிச்சி போலீஸ் கைது செய்து  அவரிடமிருந்து ரூ 21 லட்சம் மதிப்பில்லான 92 சவரன் நகையை கைப்பற்றி காவல்துறையினர்  நீதிமன்றத்தில் அஜர்படுத்தி திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி..!

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments