Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துகளில் கூட்ட நெரிசல்: காற்றில் பறந்த விதிமுறைகள்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (12:16 IST)
கூடுதலாக பஸ்களை அரசு இயக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது. அதோடு செப்டம்பர் 7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
 
அரசு பஸ்களில் 60% பயணிகள் மட்டுமே ஏற அனுமதிக்கவேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிப்பதுடன், அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
அரசு அறிவித்துள்ள தளர்வுகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொது போக்குவரத்து செயல்படுவதாக கூறப்பட்டாலும் கூட்டநெரிசல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆம், பேருந்துகளில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. 
 
மேலும், இதுபோல கூட்டநெரிசல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் கூடுதலாக பஸ்களை அரசு இயக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments