Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து மக்கள் கட்சி தனித்துப் போட்டி – அர்ஜூன் சம்பத்

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (22:09 IST)
வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்து மக்கள் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்

பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள்து.

இதுகுறித்து அக்கட்சியின் நிர்வாகி அர்ஜூன் சம்பத் கூறியுள்ளதாவது:

இந்துக்களை சட்டரீதியான பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க வேண்டி வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளோம்.

இதற்காக 234 தொகுதிகளில் இருந்தும் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது அதிமுக – பாஜக கூட்டணியில் 5 இடங்களை ஒதுக்க கோரியிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments