Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்த சிவாஜி குடும்பம்

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2015 (04:24 IST)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அறிவித்த, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நடிகர் பிரபு உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேரில் நன்றி தெரிவித்தனர்.
 

 
சென்னை, அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என சட்ட சபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
 
நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்த அறிவிப்பை, கடந்த சில நாட்களுக்கும் முன்பு, தமிழக சட்ட சபையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை வாசித்தார். அதில், சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டும் இடம் மற்றும் செலவு அனைத்தையும் அரசே ஏற்கும் என்றும் தெரிவித்தார்.
 
இதனையடுத்து, திரையுலகைச் சேர்ந்த நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தனர்.
 
இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அறிவித்த, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும்  நேரில் சென்று நன்றி தெரிவித்துக் கொண்டனர். 
 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments