சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் கார்கள் இல்லா சாலை திட்டத்தை சென்னை மேயர் சைதை துரைசாமி துவக்கிவைத்தார்.
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருகிறது. அதற்கு ஏற்றார்போல் வாகனங்களின் எண்ணிக்கையும் பல்கிப் பெருகி வருகிறது. வாகனங்கள் மூலம் வெளியேறும் புகையால் தினமும் காற்று மாசுபடுகிறது
இதனால், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுபடுதலை தவிர்க்கவும்,கார்கள் இல்லா சாலை திட்டத்தை சென்னை மேயர் சைதை துரைசாமி கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள், மண்டல அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகராட்சி, போக்குவரத்து வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சென்னை சிட்டி கனெக்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.