Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா நள்ளிரவில் கைது.. 5 பிரிவுகளில் வழக்கு..!

Webdunia
சனி, 17 ஜூன் 2023 (09:02 IST)
கடந்த சில மாதங்களாகவே பாஜக மற்றும் திமுக பிரமுகர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது என்பதும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளனர் என்பதும் தெரிந்ததே. 
 
குறிப்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின்  பாஜக மீது நேரடியாக குற்றம் சாட்டி வருவதும் அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்து வருவதும் தொடர்கதை ஆகியுள்ளது. 
 
இந்த நிலையில் பாஜகவின் மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா நேற்று நள்ளிரவில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்தியது, வதந்தி பரப்பியது உள்பட ஐந்து பிரிவுகளின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் எஸ்ஜி சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் பாஜகவினர் காவல் ஆணையர் அலுவலகம் முன் திடீரென குவிந்ததாகவும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது . 
 
சென்னை தி நகரில் உள்ள எஸ்ஜி சூர்யா வீட்டில் நேற்று நள்ளிரவு அவர் கைது செய்யப்பட்டதற்கு பாஜக பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு..!

அமெரிக்காவிலிருந்து வந்த மூன்றாவது விமானம்.. இதிலும் பயணிகளுக்கு விலங்கிடப்பட்டதா?

பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது? முக்கிய தகவல்...!

இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தம்.. டிரம்ப் அரசு அறிவிப்பு..!

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments