Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (09:32 IST)
மயிலாப்பூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 
 
நொச்சி நகரை சேர்ந்த சிந்து எனும் இளம்பெண் மன நலம் பாதிக்கப்பட்டு கடந்த 8 வருடமாக கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் நேற்று அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, அந்த பகுதியை சேர்ந்த முத்து என்பவர் அவரை தனியாக அழைத்து சென்று சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
 
முத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் சத்தம் போட்டுள்ளார். உடனே அவரது பெற்றோர் மற்றும் அருகில் உள்ளவர்கள் ஓடிவந்ததும், முத்து அக்கிருந்து ஓடிவிட்டார்.
 
பின்னர் இளம்பெண் சிந்துவின் பெற்றோர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் முத்துவை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் பல நாட்களாக சிந்துவை நோட்டமிட்டு அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்தது தெரியவந்தது.
 
இதனையடுத்து கைது செய்யப்பட்ட முத்து சிறையில் அடைக்கப்பட்டார். முத்துவுக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்