குருவிகுளம் அருகே கழிவுநீர் கால்வாய் பிரச்சனை! - ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (10:58 IST)
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட பழங்கோட்டை விஏஒ அலுவலகம் எதிரே உள்ள தெருவில் கழிவுநீர் வாறுகால் பிரச்சினையால் சுப்பிரமணியன் (60) என்பவர் திடீர் என தீக்குளிக்க முயன்றார் .


 
உடனே காவல்துறை மற்றும் அதிகாரிகள் அவரை சமாதான படுத்தி  பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதையடுத்து பொதுமக்கள் கழிவு நீரை அகற்றி வாறுகால் வசதி செய்து தர கோரி பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

அவர்களிடம் பழங்கோட்டை பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன்,  குருவிகுளம் மண்டலதுணை வட்டார வளர்ச்சி அலுவலர் சபாபதி, கிராம நிர்வாக அலுவலர், குருவிகுளம் காவல் ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் ஊர் கூட்டம் நடத்தி  பேசி முடிவு எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments