Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.71 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - சென்னையில் அதிர்ச்சி

Webdunia
சனி, 17 ஜூன் 2017 (15:09 IST)
சென்னையில் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள போதைப் பொருட்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


 

 
சென்னையில் பல இடங்களில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் வந்ததால், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று சென்னையின் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் செங்குன்றம் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் ஆலையில் ரூ.71 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் சிக்கியது. அதில், 70 கிலோ ஹெராயின், 11 கிலோ மெத்த பெட்டமைன், 56 கிலோ சூடோ பெட்ரின் போன்ற போதைப் பொருட்களும் அடக்கம்.
 
மேலும், சென்னையின் பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், அரசு தடை விதித்துள்ள புகையிலை பொருட்கள் தமிழகத்தின் அனைத்து பெட்டிக்கடைகளிலும் சர்வ சாதரணமாக விற்பனை செய்யப்படுகிறது. இதை உட்கொள்வதால் வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகிறது. 
 
எனவே, இவை அனைத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments