Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8ஆம் தேதி திருச்சியில் அனைத்து கட்சி கண்டன போராட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (07:48 IST)
நீட் தேர்வை எதிர்த்து நேற்று சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பல கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.



 
 
முதலில் அனிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டவுடன் நீட் தேர்வு காரணமாக அனிதாவின் உயிர் பறிபோனது போன்று இன்னொரு உயிர் பலியாகிவிடக்கூடாது என்றும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுக்கு இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
 
கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், 'நீட் தேர்விற்கு எதிராக வரும் 8ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாகவும் இதில் இன்று பங்கேற்ற அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.. அதன் பிறகு எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments