Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (16:02 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே 9 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பத்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் கைது செய்த நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து இன்று அவர் காணொளி மூலம் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது நவம்பர் 22 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் காவல் நீடிப்பு என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் பத்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments