Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமாவளவனுடன் கைகோர்க்கும் சீமான்.. புதிய கூட்டணி உருவாகுமா?

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (17:12 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைகோர்க்க இருப்பதாக வந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
அக்டோபர் 2ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து சமூக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் கலந்து கொள்ளும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் சீமான் கலந்து கொள்வதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே திமுக கூட்டணியில் விசிக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கும் என்ற கேள்வி அரசியல் மத்தியில் எழுந்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments