Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்தில் தான் விவசாயியா..? நான் நிஜத்திலேயே விவசாயிதான்: சீமான் ஆவேசம்

Mahendran
புதன், 27 மார்ச் 2024 (13:51 IST)
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் அவருக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது கட்சியின் சின்னத்தை அறிமுகம் செய்த சீமான் ஆவேசமாக பேசியதாவது:

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீமானுக்கு தான் ஓட்டு, சின்னத்துக்கு இல்லை. கரும்பு விவசாயி சின்னத்துக்காக கடைசி வரை போராடினோம். சின்னத்தில் தான் விவசாயியா..? நான் நிஜத்திலேயே விவசாயிதான்.

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் எங்களுக்குக் கிடைத்திருக்கும். ஆனால் என் வாழ்நாளில் சமரசத்துக்கு இடமில்லை. நாளை முதல் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளோம். நாம் தமிழர் மைக் சின்னத்தில் போட்டியிடும்!

பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பவர்களுக்கு சைக்கிள் சின்னம், குக்கர் சின்னம் கிடைத்தது போல் நானும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் கரும்பு விவசாயி சின்னம் கிடைத்திருக்கும். தேர்தல் ஆணையம் சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் சுதந்திரமாக இயங்குவதில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது என சீமான் ஆவேசமாக கூறினார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments