Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி அப்போது அமைதியாக இருந்தது ஏன்? - சீமான் கேள்வி

மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி அப்போது அமைதியாக இருந்தது ஏன்? - சீமான் கேள்வி

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (17:57 IST)
500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு மோடியும் நன்றி தெரிவித்திருந்தார்.


 

 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:
 
“பெரும்பாலான நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை ஏன் அமைக்கவில்லை? என்று ரஜினி கேள்வி எழுப்பவில்லை. அதேபோல், காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும், ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால் தற்போது, புதிய இந்தியா பிறந்துவிட்டது என ரஜினி உற்சாகப்படுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும், பணத்தை மாற்ற எந்த பணக்காரரும் வங்கியின் முன்பு வரிசையில் நிற்கவில்லை. ஏழைகளும், நடுத்தர மக்களும்தான் நிற்கிறார்கள். ரூபாய் நோட்டை ஒழித்துவிடுவதால், லஞ்சம் ஒழிந்து விடுமா?. மோடியின் அறிவிப்பை புகழ்ந்து பேசிய நடிகர்கள் புனிதர்கள் ஆகிவிடுவார்களா? ” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments