Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரே பள்ளிகள் திறக்க வேண்டும்: பெற்றோர்கள் கோரிக்கை

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (11:02 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே/ கொரோனா வைரஸ் பாதிப்பு எப்பொழுது குறைகிறதோ அப்போது தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் சமீபத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பெற்றோர்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை கேட்டது. அதன்படி ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் இந்த மூன்று மாதங்களில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்துக் கேட்டிருந்தது
 
இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரே பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் படிப்பை விட மாணவர்களின் உடல் நலமே முக்கியம் என்றும் கூறியிருந்தனர். இதனை மனிதவளத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாகவும் எனவே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த பின்னரே பள்ளிகளை திறக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த கல்வி ஆண்டின் மிகவும் தாமதமாக தொடங்கலாம் என்று கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments