Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் கைது

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2015 (15:13 IST)
விருதுநகர் அருகே பிளஸ்2 மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.



 
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு அரசு உயர்நிலை பள்ளியில் பிளஸ்2 படித்துக் கொண்டு இருக்கும் ஒரு மாணவியிடம் அந்த பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் முத்துராஜ் என்பவர் பல நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
 
இந்தநிலையில் அந்த மாணவி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது பள்ளி ஆசிரியர் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் எனது பள்ளி ஆசிரியர் முத்துராஜ் என்னிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்றும் என்னுடன் படிக்கும் 2 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்
 
இந்த புகார் குறித்து அருப்புக்கோட்டை காவல் ஆய்வாளர் அன்புமதி ஆசிரியர் முத்துராஜை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!